இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.