PCR, ரெபிட் அன்டிஜன் சோதனைகளும் அவசியமில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

நாளை (10) முதல்  திரையிடல் சோதனையாக (Screening Test) PCR அல்லது ரெபிட் அன்டிஜன் சோதனை மேற்கொள்வது அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.