நான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளேன் , இராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன் ” : கோட்டாபய ராஜபக்ச


நான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளேன் , இராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பேன் ” என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்காமல், அவர் பதவி விலகியதாக கருத முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.


ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் தனது இராஜினாமா கடிதத்தை ஜூலை 13 ஆம் திகதி இறுதிக்குள் அனுப்பி வைப்பதாக பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.